by admin on | 2025-02-06 01:57 PM
நாம் தமிழர் கட்சி தலைமை சுற்றறிக்கை ;
நாம் தமிழர் கட்சி விடுத்துள்ள சுற்றறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட வலியுறுத்தியும் , பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தியும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மார்ச் மாதம் 01.03.2025 ல் நடைபெறும் எனவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், பேரெழ்ச்சியாக நடைபெறும் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மண்டல, தொகுதிவாரி மற்றும் அனைத்து பாசறை பொறுப்பாளர்களும் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்துள்ளார் என தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் விடுதலை சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது
நிருபர் சதீஷ்குமார் தேனி.