by admin on | 2025-02-06 01:53 PM
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கார் - டிராக்டர் மோதி விபத்து, துணை ஆட்சியர் படுகாயமடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற டிராக்டர் பின்புறம் பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதிவிபத்து.
இந்த விபத்தில் காரில் வந்த துணை ஆட்சியர் சிவக்குமார் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேடசந்தூர் போலீசார் துணை ஆட்சியர் சிவகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்குஅவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.தற்போது துணை ஆட்சியர் மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!