| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

ஒரே நாளில் பொதுமக்களிடமிருந்து 622 மனுக்கள்...! கலெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்...!

by Vignesh Perumal on | 2025-05-28 12:06 PM

Share:


ஒரே நாளில் பொதுமக்களிடமிருந்து 622 மனுக்கள்...! கலெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்...!

தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கடந்த மே 22, 2025 அன்று தொடங்கி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று (மே 27, 2025) பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

பெரியகுளத்தில் ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி:

பெரியகுளம் வட்டத்தில், கீழவடகரை, வடகரை பிட்-1, வடகரை பிட்-2, தென்கரை பிட்-1, தென்கரை பிட்-2 ஆகிய கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் 133 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. ஜமாபந்தி முடிந்ததும், பெரியகுளம் வட்டத்தில் 52 நபர்களுக்குப் பட்டாக்களும், 20 நபர்களுக்குப் புதிய குடும்ப அட்டைகளும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டன.

பிற வட்டங்களில் ஜமாபந்தி மற்றும் பெறப்பட்ட மனுக்கள்:

உத்தமபாளையம் வட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஐ. மகாலட்சுமி அவர்கள் தலைமையில், க. புதுப்பட்டி, உத்தமபுரம், கம்பம், மேலக்கூடலூர் (தெற்கு), மேலக்கூடலூர் (வடக்கு), கீழக்கூடலூர் (மேற்கு), கீழக்கூடலூர் (கிழக்கு) ஆகிய கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 98 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

ஆண்டிபட்டி வட்டம்: பெரியகுளம் சார் ஆட்சியர் திரு. ரஜத் பீடன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மொட்டனூத்து, ஜி. உசிலம்பட்டி, தேக்கம்பட்டி, மரிக்குண்டு, குன்னூர், வள்ளல்நதி ஆகிய கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 73 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

தேனி வட்டம்: மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திருமதி மாரிச்செல்வி அவர்கள் தலைமையில், பூமலைக்குண்டு, தப்புக்குண்டு, தாடிச்சேரி, கோவிந்தநகரம் ஆகிய கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 100 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

போடிநாயக்கனூர் வட்டம்: உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு. செய்யது முகமது அவர்கள் தலைமையில், டொம்புச்சேரி, கூழையனூர், போடிநாயக்கனூர், மேலச்சொக்கநாதபுரம், போடி மேற்குமலை ஆகிய கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 218 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

நேற்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில், தேனி மாவட்டம் முழுவதும் மொத்தம் 622 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு-இறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து நிவாரணத்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகப் பெறப்பட்டுள்ளன.

பெறப்பட்ட மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


இந்த நிகழ்வில் உதவி இயக்குநர் (நில அளவை) திரு. அப்பாஸ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி காமாட்சி, வட்டாட்சியர்கள் திரு. மருதுபாண்டி, திரு. சரவணபாபு, திருமதி பிரதீபா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜமாபந்தி மூலம் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நேரடியாக அதிகாரிகளிடம் எடுத்துரைத்து தீர்வு பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.



நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment