| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Chennai

மிகப் பழமையான மரம் சாலையில் சாய்ந்தது..! சினிமா பாணியில் செயல்பட்ட காவலர்கள்...! குவியும் பாராட்டுக்கள்...!

by Vignesh Perumal on | 2025-05-27 08:36 PM

Share:


மிகப் பழமையான மரம் சாலையில் சாய்ந்தது..! சினிமா பாணியில் செயல்பட்ட காவலர்கள்...! குவியும் பாராட்டுக்கள்...!

சென்னை சைதாப்பேட்டைப் பகுதியில் மிக மிகப் பிரபலமான, பழைமையான மற்றும் அரிய வகையான இலவம் பஞ்சு மரம் ஒன்று அடியோடு சாய்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சைதாப்பேட்டை சுரங்கப்பாதை (Subway) அருகே பல பத்தாண்டுகளாக இருந்த இந்த ராட்சத இலவம் பஞ்சு மரம், திடீரென வேரோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மரத்தின் பிரம்மாண்டமான கிளைகள் சாலை முழுவதும் பரவியதால், வாகனங்கள் செல்ல வழியின்றி நின்றன.

இந்த தகவலை அறிந்த சைதாப்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் இராதாகிருஷ்ணன், எந்தவித உபகரணங்களும் இல்லாமல் பொதுமக்களின் உதவியுடன் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். போக்குவரத்து இடை இல்லாமல், பொதுமக்களின் உதவியுடன் சாய்ந்த மரத்தின் பகுதிகளை வெட்டி அப்புறப்படுத்த அவர் ஏற்பாடு செய்தார்.

இராதாகிருஷ்ணன் மற்றும் பொதுமக்களின் துரித நடவடிக்கையால், அப்பகுதியில் எந்தவித போக்குவரத்து நெரிசலும் ஏற்படாமல் மக்கள் சுலபமாக சென்றுள்ளனர். இவர்களின் இந்த உடனடி செயல், அப்பகுதியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இது, அவசர சூழ்நிலைகளில் அதிகாரிகளின் துரித நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு எவ்வாறு பெரும் பாதிப்புகளைத் தவிர்க்க உதவுகிறது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.


செய்தி-ஜெயவேல் சென்னை.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment