by admin on | 2025-02-05 07:53 PM
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கொந்தளிப்பு
அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட நம் நாட்டவர்கள் கைகளில் விலங்கு கட்டி அவமானப்படுத்தி அனுப்பப்படுவது ஒரு இந்தியராக மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
2013ல் இந்திய தூதரக அதிகாரி தேவயாணி இதுபோல அமெரிக்காவில் அவமானப்படுத்தப்பட்ட போது, இந்திய வெளியுறவு செயலர் உடனடியாக கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
அமெரிக்கா செய்தது 'மோசமானது' என பிரதமர் மன்மோகன் கடுமையாக விமர்சித்தார்.
எதிர்ப்புகளின் விளைவாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி உடனே மன்னிப்பு கோரினார்.