| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

திருவாரூர் ஆழித்தேர் ஏப்ரல் 7ல் நடைபெறுகிறது.

by admin on | 2025-02-05 07:51 PM

Share:


திருவாரூர் ஆழித்தேர் ஏப்ரல் 7ல் நடைபெறுகிறது.

திருவாரூர் ஆழித்தேர் 2025

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தேர்திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 07 ம் தேதியன்று நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக தேர் திருவிழா நடைபெறும்.


"ஆழித்தேர்"


திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம்.ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், தேராரூம் நெடுவீதி திருவாரூர் என சேக்கிழாரும் பாடிய சிறப்புமிக்கது திருவாரூர் ஆழித்தேராகும்.ஆரூர்த் தலத்தின் இறைவன் மூலவரின் திருநாமம் வன்மீகநாதர். உத்ஸவரின் திருநாமம் தியாகராஜர். இந்தக் கோயிலின் மற்றுமொரு சிறப்பு... இந்தக் கோயிலில் எப்போது வழிபாடுகள் நடந்தாலும் ‘ஆரூரா... தியாகேசா... ஆரூரா... தியாகேசா’ என்று இரண்டு முறை சொல்லிவிட்டுத்தான் பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆரூரும் அழகு. ஆரூர் கமலாலயமும் அழகு. ஆரூர்த் தேரும் பேரழகு!

சைவ சமய மரபில் பெரியகோவில் என்று அழைக்கப்படுவது திருவாரூர் தியாகராஜர் கோவிலாகும். இக்கோவிலில் ஆழித்தேர் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக இத்தேர் விளங்குகிறது.ஆரூரா தியாகேசா 


நிருபர் இளங்கோ திருவாரூர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment