by Vignesh Perumal on | 2025-05-24 12:50 PM
சென்னை பெரம்பூர் அருகே உள்ள ஒரு டிபன் கடையில், மதுபோதையில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்ததுடன், 5 ஆயிரம் ரூபாய் "மாமூல்" கேட்டு தகராறில் ஈடுபட்ட பீமாராவ் குடியரசு கட்சியின் மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர், அகரம் சாலைப் பகுதியில் உள்ள ஒரு டிபன் கடைக்கு நேற்று (மே 23, 2025) இரவு பீமாராவ் குடியரசு கட்சியின் மாவட்ட செயலாளரான கிஷோர் குமார் வந்துள்ளார். மதுபோதையில் இருந்த அவர், கடையில் உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
சாப்பிட்டு முடித்ததும், உணவுக் கட்டணத்தை செலுத்த மறுத்த கிஷோர் குமார், கடை உரிமையாளரிடம் 5 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர், மாமூல் கொடுக்க மறுக்கவே, கிஷோர் குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
கடை உரிமையாளர் உடனடியாக பெரம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கிஷோர் குமாரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மதுபோதையில் இருந்ததும், பணம் கொடுக்க மறுத்து மாமூல் கேட்டு மிரட்டியதும் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கிஷோர் குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மற்ற வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!