by Satheesh on | 2025-05-23 04:37 PM
பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைவர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர் முகம்மது யூனுஸ், தன்னைச் சுற்றிய சூழ்நிலைகளால் சரியாக செயல்பட முடியவில்லை என கூறி, பதவி விலக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்த அறிவிப்பால் வியாழக்கிழமை மாலை அரசாங்கத்திலும், அவரது ஆலோசகர்களிடையிலும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அவரை பதவியில் தொடர வைக்க பலரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் பதவி விலக திட்டமிடுவதற்குப் பின்னணி என்ன? இராணுவத் தலபதியுடன் அவருடைய உறவு பாதிக்கப்பட்டதா என்பது தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது. இந்த முடிவு, நாட்டின் அரசியல் நிலையை மேலும் குழப்பமாக மாற்றுமா என்பதற்கான அச்சமும் எழுந்துள்ளது.
செய்தியாளர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.