| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

தமிழ் பாடத்தில் 96 மதிப்பெண் பெற்ற மராட்டிய மாணவன்...!!! பல்வேறு தரப்பினர் மாணவனுக்கு பாராட்டு..!!!?

by Muthukamatchi on | 2025-05-20 03:08 PM

Share:


தமிழ் பாடத்தில் 96 மதிப்பெண் பெற்ற மராட்டிய மாணவன்...!!! பல்வேறு தரப்பினர் மாணவனுக்கு பாராட்டு..!!!?

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டார அளவில் பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வில்  முதலிடம் பிடித்து மகாராஷ்டிரா மாநில மாணவன் சாதனை..!!!

தாய்மொழி மராட்டியாக இருந்தும் தமிழ் பாடத்தில்  96 மதிப்பெண் எடுத்து வியக்க வைப்பு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆண்டிபட்டி தனியார் மெட்ரிக் பள்ளி மாணவன் பிரணவ்  ஆண்டிபட்டி வட்டார அளவில் 500க்கு 490 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்து  சாதனை செய்துள்ளார்மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டம் கார்வேவ் நகரைச் சேர்ந்தவர் ஜாதவ்சங்கர்  அருணா தம்பதியினர்தங்க நகை வியாபாரம் செய்து வந்த இவர்கள் பிழைப்பிற்காக கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் தேனிமாவட்டம்  ஆண்டிபட்டிக்கு குடிபெயர்ந்தனர் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில்  சேர்க்கப்பட்ட மாணவன் பிரணவ் தற்போது பத்தாம் வகுப்பு மெட்ரிக் பொதுத் தேர்வில் 500க்கு 490 மதிப்பெண்கள் எடுத்து ஆண்டிபட்டி வட்டார அளவில் முதலிடம் பிடித்து சாதனை  செய்துள்ளார்


மேலும் மராட்டிய மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவன் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு 96 மதிப்பெண்கள் எடுத்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்மேலும் ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும் அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் எடுத்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்விடுமுறைக்காக மகாராஷ்டிரா மாநிலம் சொந்த ஊருக்கு சென்ற மாணவன்இன்று ஆண்டிபட்டி திரும்பி வந்த நிலையில் அவருக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் இனிப்புகளை ஊட்டி தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்ந்தனர்மாணவன் பிரணவ் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வருங்காலத்தில் மென்பொருள் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறியுள்ளார்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment