by admin on | 2025-02-04 08:06 PM
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு. பத்திரிகையாளர்கள் செல்போன்களை திருப்பி வழங்க உத்தரவு.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை FIR வழக்கு பத்திரிகையாளர்களிடம் பறிமுதல் செய்த செல்போன்களை திருப்பி வழங்க சிறப்பு புலனாய்வு குழு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது என்றும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
விசாரணையின் போது பத்திரிகையாளர்களின் குடும்ப விவரங்களை ஏன் கேட்க வேண்டும்?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கையை அப்லோடு செய்தது யார்?
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த கோட்டூர்புரம் காவல் ஆய்வாளரை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்ததா?
முதல் தகவல் அறிக்கை கசிந்த வழக்கில் கோட்டூர்புரம் காவல் நிலைய ஆய்வாளரை விசாரித்தீர்களா?-உயர்நீதிமன்றம்