by Muthukamatchi on | 2025-05-19 04:51 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா முதலக்கம்பட்டி C.RAJA-JAYKodi அவர்களின் மகன் வழி பேத்தியும், ஆனவிலாசம் C.சண்முகையா - S. சாந்தி அவர்கள் மகள் வழி பேத்தியும் , R.சசிகுமார் S.சுஹாசினி ஆகியோர் மகளுமான செல்வி ச. மகிழ்நிலா விற்கு சலங்கை அணியும் விழா அருள்மிகு ஊர் கால சுவாமி திருக்கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
பரதநாட்டிய குழு ஜடாபேபி அவர்கள் சுமார் 20 வருட காலமாக பரதநாட்டிய துறையில் பல மாணவிகளை திறம்பட உருவாக்கி வருகிறார் 20 முறைகளுக்கு மேல் பல உலக சாதனைகளை புரிந்தவர் இவர் இத்துறையில் டாக்டர். பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது கலை வளர்மணி, நாட்டிய பேரொளி , க
கலை ரத்னா போன்ற பல உயரிய விருதுகளை பெற்றவர் -செல்வி சா .மகிளா நிலா மூன்றாம் வகுப்பு வேலம்மாள் போதி வளாகம் தேனியில் படித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக திருமதி ஜடா பேபி அவர்களிடம் படிதம் கற்று வருகிறார்.
இவ்விழாவில் ஊர் நாட்டாமை ரங்கசாமி நாயக்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபா மருதுபாண்டியன், பெரியகுளம் தெற்கு ஒன்றிய திமுக மகளிர் அணி அமைப்பாளர் லட்சுமி பிரியா வீரபத்திரன், தவெக கிளைச் செயலாளர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
T.MUTHUKAMATCHI. EVIDENCE EDITOR