| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் ADMK

திமுக நிர்வாகி பாலியல் வழக்கு...! அரசு நடவடிக்கை எடுக்குமா..? எடப்பாடி குற்றச்சாட்டு...!

by Vignesh Perumal on | 2025-05-19 03:37 PM

Share:


திமுக நிர்வாகி பாலியல் வழக்கு...! அரசு நடவடிக்கை எடுக்குமா..? எடப்பாடி குற்றச்சாட்டு...!

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி கல்லூரி மாணவியை ஏமாற்றிய பாலியல் புகார் தொடர்பாக, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், மக்கள் துணையுடன் அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி இன்று (மே 19, 2025) வெளியிட்ட அறிக்கையில், அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி கல்லூரி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த வாக்குமூலத்தில், தன்னைப் போலவே "20 வயதுள்ள 20 பெண்கள்" திமுக நிர்வாகியின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரக்கோணம் எம்.எல்.ஏ.விடம் மாணவி முறையிட்ட பிறகே இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

"இந்த விவகாரத்தில் அரசு மெத்தனமாக செயல்பட்டால், அதிமுக மக்கள் துணையுடன் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்" என்று எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment