by Vignesh Perumal on | 2025-05-19 12:28 PM
நாடாளுமன்றத்தில் சிறந்த முறையில் செயல்பட்டு மக்கள் நலனுக்காக குரல் கொடுத்தமைக்காக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரைக்கு மதிப்புமிக்க சன்சத் ரத்னா தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சன்சத் ரத்னா விருது வழங்கும் குழுவின் சார்பில் இன்று (மே 19, 2025) இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜூலை மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள சன்சத் ரத்னா விருதளிப்பு குழுவின் 15-வது ஆண்டு விழாவில் சி.என்.அண்ணாதுரைக்கு இந்த விருது வழங்கப்படும்.
பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் நிறுவப்பட்ட இந்த விருதுக்கு, தகுதியான எம்.பி.க்களை தேசிய பிற்படுத்தப்பட்டோா் ஆணைய (என்சிபிசி) தலைவா் ஹன்ஸ்ராஜ் அஹிா் தலைமையிலான தோ்வுக்குழு தோ்வு செய்தது.
இதுகுறித்து பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நாடாளுமன்றத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் 17 எம்.பி.க்கள் நிகழாண்டுக்கான சன்சத் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
மஹ்தாப் மற்றும் சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் சரத் பவாா் பிரிவு), என்.கே.ரேமசந்திரன் (புரட்சிகர சோஷலிஸ கட்சி), ஸ்ரீரங் பாா்னே (சிவசேனை ஷிண்டே பிரிவு) ஆகிய 4 எம்.பி.க்கள் 16-ஆவது, 17-ஆவது மற்றும் நடப்பு 18-ஆவது மக்களவையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். எனவே, இவா்கள் நால்வருக்கும் ‘நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு சிறப்பான மற்றும் தொடா்ச்சியான பங்களிப்பு’ என்ற விருது வழங்கப்படவுள்ளது.
இவா்கள் தவிர ஸ்மிதா வாக் (பாஜக), அரவிந்த் சாவந்த் (சிவசேனை உத்தவ் பிரிவு), நரேஷ் கண்பத் (சிவசேனை ஷிண்டே பிரிவு), வா்ஷா கெய்க்வாட் (காங்கிரஸ்), மேதா குல்கா்னி (பாஜக), பிரவீண் படேல் (பாஜக), ரவி கிஷன் (பாஜக), நிஷிகாந்த் துபே (பாஜக), வித்யுத் பாரன் மஹாதே (பாஜக), பி.பி.சௌதரி (பாஜக), மதன் ரத்தோா் (பாஜக), சி.என்.அண்ணாதுரை (திமுக) மற்றும் திலீப் சைகியா (பாஜக) ஆகியோரும் சன்சத் ரத்னா விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
சி.என்.அண்ணாதுரை தனது நாடாளுமன்ற பணிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மக்களவையில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து அவர் ஆற்றிய உரைகள் மற்றும் மக்கள் நலனுக்கான அவரது முயற்சிகள் தேசிய அளவில் கவனிக்கப்பட்டது. குறிப்பாக, திருவண்ணாமலை தொகுதி மக்களின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததற்கு இந்த விருது அங்கீகாரம் அளித்துள்ளது.
11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இந்த தேசிய விருதைப் பெறுவது அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சி.என்.அண்ணாதுரைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திருவண்ணாமலை தொகுதி மக்கள் இந்த செய்தியால் பெருமிதம் அடைந்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.