by admin on | 2025-02-04 06:58 PM
திருப்பூரில் தனியார் பெயிண்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிற்கான பெயிண்டுகள் தின்னர்கள் முற்றிலும் எரிந்தன.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் கிருஷ்ணா டெமி என்ற பெயரில் வீடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய பெயிண்ட் மற்றும் தின்னர் வகைகளை வாங்கி ஸ்டாக் வைத்து திருப்பூர் முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் இந்த குடோன் வைத்து நடத்தி வந்த நிலையில் இன்று மதியம் பெயிண்ட் மற்றும் தின்னர் இருந்த குடோனில் உள்ள ஒரு அறையில் இருந்து தீ எரிவதை கண்ட தொழிலாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயானது அந்த அறையில் இருந்த பெயிண்ட் மற்றும் தின்னர் கேன்களில் பரவியதை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் 2 வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சிகள் ஈடுபட்டனர். இதனிடையே குடோனையில் இருந்த தொழிலாளர்கள், குடோனில் இருந்து வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பெயிண்டுகள் மற்றும் தின்னர்கள், இருச்சக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி படங்கள் நன்றி முத்தழகர் திருப்பூர்
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!