by Vignesh Perumal on | 2025-05-18 02:47 PM
குமரியில் புதுமனை புகுவிழாவிற்கு சென்ற ராணுவ வீரர் ஒருவர், அங்குள்ள குளியலறையில் ரகசிய கேமரா வைத்து இரண்டு ஆண்டுகளாக பெண்ணின் வீடியோவை பதிவு செய்து வந்த நிலையில், தற்போது விடுமுறைக்கு வந்தபோது மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் புதுமனை புகுவிழா கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ராணுவ வீரரான மதுநடராஜா என்பவர், அந்த வீட்டின் குளியலறையில் ரகசிய கேமராவை மறைத்து வைத்துள்ளார். பின்னர், அவர் மிசோரமில் பணிபுரிந்தவாறு அந்த கேமரா மூலம் பதிவான வீடியோக்களை இரண்டு ஆண்டுகளாக பார்த்து வந்துள்ளார்.
சமீபத்தில் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்த மதுநடராஜா, அந்தப் பெண்ணை தான் பதிவு செய்த வீடியோக்களைக் காட்டி மிரட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் பெண்ணின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுநடராஜா குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுத்ததும், அதனை வைத்து மிரட்டியதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் மதுநடராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர் ஒருவர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரிய குளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!
பெரியகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு - அதிர்ச்சி ! இரு தரப்பு மோதல் - பரபரப்பு !! திமுக நிர்வாகி உட்பட 5 பேர் !கைது !!