by Vignesh Perumal on | 2025-05-18 01:03 PM
திண்டுக்கல் அருகே உள்ள ஏ.வெள்ளோடு பிரிவு அருகே திருமண நிகழ்ச்சிக்கு வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து வருகிறது.
சம்பவம் இன்று (18.05.2025) மதியம் ஏ.வெள்ளோடு பிரிவு அருகே நிகழ்ந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்தவர்களின் கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீயை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. எனினும், வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரிய குளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!