by Vignesh Perumal on | 2025-05-18 12:55 PM
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே புளிய மரத்தில் போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் காவல் ஆய்வாளர் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (18.05.2025) காலை காட்பாடி அருகே நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் காவல் ஆய்வாளர் தயாளன், வாகனத்தின் ஓட்டுநர் தினேஷ் மற்றும் ஆய்வாளர் தயாளனின் மகன் சித்தா தர்ஷன் ஆவர். இவர்கள் மூவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் வாகனம் காட்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரத்திலிருந்த புளிய மரத்தில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!