by Vignesh Perumal on | 2025-05-18 12:55 PM
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே புளிய மரத்தில் போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் காவல் ஆய்வாளர் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (18.05.2025) காலை காட்பாடி அருகே நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் காவல் ஆய்வாளர் தயாளன், வாகனத்தின் ஓட்டுநர் தினேஷ் மற்றும் ஆய்வாளர் தயாளனின் மகன் சித்தா தர்ஷன் ஆவர். இவர்கள் மூவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் வாகனம் காட்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரத்திலிருந்த புளிய மரத்தில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!