by Vignesh Perumal on | 2025-05-18 12:44 PM
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் நேற்று (17.05.2025) இரும்பு கேட் விழுந்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்களின் பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி, தனியார் நிறுவனத்தின் மேலாளர் எபனேசர் கிருபாகரன் மற்றும் உற்பத்தி பிரிவு மேலாளர் சிவபெருமாள் ஆகியோர் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அஜாக்கிரதையாக தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதித்தது, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!