by Vignesh Perumal on | 2025-05-18 12:44 PM
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் நேற்று (17.05.2025) இரும்பு கேட் விழுந்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்களின் பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி, தனியார் நிறுவனத்தின் மேலாளர் எபனேசர் கிருபாகரன் மற்றும் உற்பத்தி பிரிவு மேலாளர் சிவபெருமாள் ஆகியோர் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அஜாக்கிரதையாக தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதித்தது, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!