by Vignesh Perumal on | 2025-05-18 12:44 PM
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் நேற்று (17.05.2025) இரும்பு கேட் விழுந்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்களின் பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி, தனியார் நிறுவனத்தின் மேலாளர் எபனேசர் கிருபாகரன் மற்றும் உற்பத்தி பிரிவு மேலாளர் சிவபெருமாள் ஆகியோர் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அஜாக்கிரதையாக தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதித்தது, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரிய குளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!