by Vignesh Perumal on | 2025-05-18 11:23 AM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகிலுள்ள கும்பக்கரை அருவியில் இன்று (18.05.2025) காலை 10 மணி முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
நேற்று (17.05.2025) கும்பக்கரை அருவியில் பாதுகாப்பு கம்பிகள் சேதமடைந்திருந்ததால் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மராமத்து பணிகள் இன்று காலை 10 மணிக்குள் நிறைவடைந்ததை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், அருவியின் இயற்கை அழகை ரசிக்கவும், குளித்து மகிழவும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர். வனத்துறையினரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருப்பது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!