| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Kanniyakumari

கன்னியாகுமரியில் குவிந்த மக்கள்...! எதுக்குன்னு தெரியுமா...?

by Vignesh Perumal on | 2025-05-18 10:06 AM

Share:


கன்னியாகுமரியில் குவிந்த மக்கள்...! எதுக்குன்னு தெரியுமா...?

கோடை விடுமுறை முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இன்று (18.05.2025) அதிகாலையில் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான அற்புதக் காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர்.

முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தைக் காண காத்திருந்தனர். வானம் மெல்ல சிவந்து, சூரியன் கடலில் இருந்து எழும் அந்த கண்கொள்ளாக் காட்சியை சுற்றுலாப் பயணிகள் பார்த்து பரவசமடைந்தனர். பலர் அந்த அழகிய தருணத்தை தங்கள் கைபேசிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

கோடை விடுமுறை நெருங்கி வருவதால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வருகின்றனர். விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலை முதலே கூட்டம் அலைமோதியது.

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலாப் போலீசார் மற்றும் கடலோரக் காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோடை விடுமுறை முடியும் வரை கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment