by Vignesh Perumal on | 2025-05-17 05:43 PM
எம்.ஆர்.சி. நகரில் உள்ள ரித்தீஷ் என்பவரின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துச் சென்றுள்ளனர்.
ரித்தீஷ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அமலாக்கத் துறையினர் விசாரணைக்காக பலமுறை தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தும் யாரும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை பாதுகாக்கும் நோக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (17.05.2025) ரித்தீஷின் வீட்டிற்குச் சென்று பூட்டி சீல் வைத்துள்ளனர்.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ரித்தீஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விசாரணைக்கு வருமாறு பலமுறை அழைப்பு விடுத்தோம். ஆனால், அவர்கள் யாரும் ஆஜராகவில்லை. வீட்டில் முக்கியமான ஆவணங்கள் இருக்கலாம் என்பதால், அவற்றை பாதுகாக்கும் பொருட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணைக்கு வரும்போது, சீல் அகற்றப்பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்படும்" என்று தெரிவித்தனர்.
ரித்தீஷ் யார், அவர் மீதான புகார் என்ன என்பது குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை சென்னை எம்.ஆர்.சி. நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரிய குளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!