| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

நீட் தேர்வு முடிவு வெளியிட தடை...! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

by Vignesh Perumal on | 2025-05-17 05:10 PM

Share:


நீட் தேர்வு முடிவு வெளியிட தடை...! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மின்தடை காரணமாக முழுமையாக நீட் தேர்வை எழுத முடியவில்லை என்று கூறி 13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் மனுவில், நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக தங்களால் முழுமையாக தேர்வை எழுத முடியவில்லை என்றும், எனவே தங்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த மனு தொடர்பாக மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் மறுதேர்வு கோரிய மாணவர்களின் மனு மற்றும் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளில் முக்கியத்துவம் பெறுகிறது.


இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணையின் முடிவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தெளிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment