by Vignesh Perumal on | 2025-05-17 11:47 AM
கும்பக்கரை அருவியில் இன்று (17.05.2025) ஒரு நாள் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகிலுள்ள கும்பக்கரை அருவியில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பிகள் சேதமடைந்துள்ள நிலையில், அதனை சீரமைக்கும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த மராமத்து பணிகள் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று ஒரு நாள் மட்டும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மராமத்து பணிகள் நிறைவடைந்தவுடன், நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இன்று கும்பக்கரை அருவிக்கு செல்ல திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் இந்த தடையை கருத்தில் கொண்டு தங்களது பயணத்தை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரிய குளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!