| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை...! எந்த பகுதியில் தெரியுமா...?

by Vignesh Perumal on | 2025-05-17 11:31 AM

Share:


இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை...! எந்த பகுதியில் தெரியுமா...?

தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் இன்றும் (17.05.2025) நாளையும் (18.05.2025) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இந்த 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment