by Vignesh Perumal on | 2025-05-17 10:46 AM
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திரா கோட்டை இராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், வல்லத்திரா கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் மூன்று இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த சிறப்பான வெற்றியைப் பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் குமார் மாணவிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டி பேசினார். மேலும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒவ்வொரு மாணவிகளுக்கும் பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த சிறப்பான வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டு தெரிவித்தனர். பள்ளியின் இந்த சாதனை அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி-பழனியப்பன் புதுக்கோட்டை.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரிய குளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!