| | | | | | | | | | | | | | | | | | |
விளையாட்டு Sports

பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது, ரசிகர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு :

by Satheesh on | 2025-05-16 08:42 PM

Share:


பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது, ரசிகர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு :

தேனி: பெரியகுளத்தில் 64 ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் இன்று  துவங்கியது. பெரிய குளத்தில் உள்ள சில்வர் ஜூப்ளி விளையாட்டு கழகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள், நடைபெற்று வருகிறது. பெரியகுளம், துரை ராம சிதம்பரம் நினைவு விளையாட்டு அரங்கில் நடைபெறும் இப் போட்டிகளில், இந்தியாவின் தலைசிறந்த அணிகளான, புதுடெல்லி இந்திய விமானப்படை அணி, புதுடெல்லி தரைப்படை அணி, லோனோ வாலா வைச் சேர்ந்த இந்திய கப்பல் படை அணி, பேங்க் ஆப் பரோடா பெங்களூரு, கேரளா மின்வாரியம், இந்தியன் வங்கி சென்னை,  தெற்கு ரயில்வே சென்னை, உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்கின்றன, 

இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சில்வர் ஜூப்ளி விளையாட்டு கழகம் பெரியகுளம் அணியுடன், கோவையைச் சேர்ந்த ராஜலட்சுமி கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கோவை ராஜலட்சுமி கூடைப்பந்து கழக அணி 85- 38 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 2 வது போட்டியில், பேகாசஸ், மதுரை அணியுடன், தேனி எல் எஸ் மில் அணி   விளையாடியது, இதில் மதுரை பெகாசஸ் அணி 84-73 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. 3 வது நடைபெற்ற போட்டியில், பெரியகுளம் சில்வர் ஜூப்ளி விளையாட்டு கழக, கிரீன்ஸ் அணியுடன் அணியுடன், சென்னை ஜெயராமன் கூடைப்பந்து கழக அணி விளையாடியது, இதில் சென்னை ஜெயராமன் கூடைப்பந்து கழக அணி 94-53 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

நான்காவது போட்டியில், சென்னை காவல்துறை அணியுடன், கம்பம் பென்னிகுக் அணி விளையாடியது, 

இதில், சென்னை காவல்துறை அணியினர் 58- 39 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டிகளை, ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலையின் பொது மேலாளர் ஞானசேகரன் துவக்கி வைத்தார்.

பெரியகுளம் நகர்மன்ற தலைவர் திருமதி சுமிதா சிவகுமார் விளையாட்டு கழக  கொடியினை ஏற்றி வைத்தார்.

சில்வர் ஜூப்ளி விளையாட்டுக்களாக துணைத் தலைவர் அபுதாகிர் தலைமை வகித்தார். பெரியகுளம் நகராட்சி கமிஷனர் செல்வி தமிகா சுல்தானா, மற்றும் பெரியகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமதி கீதா அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து வரும் 21 ஆம் தேதி வரை லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு, முதலாவது பரிசாக P D சிதம்பர சூர்ய நாராயணன் நினைவு சுழற்  கோப்பை மற்றும் ₹ 50,000 வழங்கப்படுகிறது. 

2வது பரிசாக அழகு சங்கரலிங்கம் செட்டியார் நினைவு சுழற் கோப்பை மற்றும் ₹ 40 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. 

3வது பரிசாக L V பொன்னையா நாயுடு  சீதை அம்மாள் நினைவு சுழற் கோப்பை மற்றும் ₹ 30 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது, 4வது பரிசாக செல்வ குமார பாண்டியன் நினைவாக சுழற் கோப்பை மற்றும் ₹ 20 ஆயிரம் வழங்கப்படுகிறது. போட்டிகளில் சிறந்த விளையாட்டு வீரருக்கு  தேனி அருண் மோட்டார் வழங்கும் ஹீரோ பைக் பரிசாக வழங்கப்படுகிறது. 

இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை  பெரியகுளம் சில்வர் ஜூப்ளி விளையாட்டுக் கழக செயலாளர் P C சிதம்பர சூர்ய வேலு மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். 

செய்தியாளர் : N.சதீஷ்குமார்,  பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment