by admin on | 2025-02-04 07:12 AM
திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.15,50,000 மோசடி செய்த வழக்கில் கேரளா வாலிபர் கைது
திண்டுக்கல், R.M.காலனியை சேர்ந்த 30 வயது பெண்ணிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி வாட்ஸ் அப் மூலம் பயிற்சிஅளித்து பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.15,50,000 பணத்தைப் பெற்றுக் கொண்டனர் அதன் பிறகு அந்த பெண் அவர்களின் செல்போனுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை இதைத் தொடர்ந்து இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் அவர்களிடம் புகார்அளித்தா ர். இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் ADSP. தெய்வம் மேற்பார்வையில் சைபர் கிரைம் ஆய்வாளர் விக்டோரியா லூர்துமேரி, தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் லாய்டுசிங் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு சென்னையை சேர்ந்த ஜீவா(31) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சமீர்(42) என்பவரை கேரளாவில் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தி படம் நன்றி :
மோகன் கணேஷ் திண்டுக்கல்
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!