| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

பழமையான மரம் கடத்தல்..! வனத்துறை நடவடிக்கை எடுக்குமா..?

by Vignesh Perumal on | 2025-05-16 04:59 PM

Share:


பழமையான மரம் கடத்தல்..! வனத்துறை நடவடிக்கை எடுக்குமா..?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பெரியூர் கிராமத்தில் பல ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று வெட்டி கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

பெரியூர் கிராமத்தில் நேற்று (15.05.2025) இரவு யாரோ சிலர் பல ஆண்டுகளாக அப்பகுதியில் இருந்த பெரிய மரத்தை வெட்டி கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இன்று காலை அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சியடைந்தனர். பழமையான மரம் வெட்டப்பட்டதால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இந்த மரம் பல ஆண்டுகளாக எங்கள் கிராமத்தின் அடையாளமாக இருந்தது. யாரோ சிலர் இரவோடு இரவாக வெட்டி கடத்தி சென்றுவிட்டனர். இது மிகவும் வருத்தமளிக்கிறது.

வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மரம் வெட்டியவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment