by Vignesh Perumal on | 2025-05-16 01:19 PM
திருவண்ணாமலையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) எப்போதும் பாஜகவுடன் தான் இருக்கிறார் என்றும், பிரதமர் மோடியின் இதயத்தில் அவருக்கு தனி இடம் இருக்கிறது என்றும் கூறினார்.
அண்ணாமலை மேலும் கூறுகையில், "ஓ.பி.எஸ். அவர்கள் எப்போதும் எங்களுடன் தான் இருக்கிறார். அவர் பாஜக கூட்டணியில் தான் தொடர்கிறார். பிரதமர் மோடியின் இதயத்தில் அவருக்கு தனி இடம் இருக்கிறது. மேலும், அவர் பாஜகவின் மதிப்புமிக்க தலைவர்" என்று குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக பல செய்திகள் வெளியானது. ஆனால், இதனை அண்ணாமலை மறுத்துள்ளார்.
மேலும், அதிமுக கூட்டணியை விமர்சித்த அண்ணாமலை, அதிமுக உடன் கூட்டணி அமைத்தது ஒரு தவறான முடிவு என்று கூறினார். இந்த சந்திப்பின் போது, திருவண்ணாமலை பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!