by Vignesh Perumal on | 2025-05-15 11:03 AM
நீலகிரி மாவட்டம் உதகையில் புகழ்பெற்ற மலர்க் கண்காட்சி இன்று (மே 15, 2025) தொடங்குகிறது. இதனையொட்டி, உதகை தாலுகாவுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா தன்னேரு இந்த விடுமுறையை அறிவித்துள்ளார். உதகையில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை பொருந்தும்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, வரும் மே மாதம் 31-ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாகக் கருதப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் இந்த மலர்க் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.