by Vignesh Perumal on | 2025-05-14 02:43 PM
நமது சர்வதேச பத்திரிகையாளர்கள் அமைப்பான 'வாய்ஸ் ஆஃப் மீடியா' (Voice of Media - VOM) மற்றும் வி.ஓ.எம். சர்வதேச மன்றத்தின் தேசிய அளவிலான மாநாடு வரும் மே 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்கும்படி, நமது அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மும்பையைச் சேர்ந்த திரு. திவ்யா அவர்கள், மாண்புமிகு அமைச்சர் ரக்ஷாஜி காட்சே அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த தேசிய மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம். டெல்லி பயணம் நீண்ட தூரம் என்பதையும், கலந்துகொள்வதில் உள்ள சிரமத்தையும் நான் அறிவேன். இருப்பினும், வாய்ப்பு உள்ள நண்பர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
டெல்லியில் தங்குமிடம் மற்றும் உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் உடனடியாக என்னிடம் (வாட்ஸ்சாப்பில்) தங்கள் வருகையைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதற்கான ஏற்பாடுகளை நான் மேற்கொள்கிறேன்.
இவ்வாறு, 'வாய்ஸ் ஆஃப் மீடியா' அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.