by Vignesh Perumal on | 2025-05-14 02:28 PM
மதுரை கள்ளழகர் திருவிழாவை முன்னிட்டு, ராகவி சினி ஆர்ட்ஸ் மற்றும் லியானா குரூப்ஸ் இணைந்து அன்னதானம் வழங்கினர். எஸ்.டி.சுப்பிரமணியன், கருங்காலக்குடி சந்துரு, திண்டுக்கல் தேவி ஆகியோரின் நல்லாசியுடன், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் இந்த அன்னதானம் நடைபெற்றது.
மதுரையின் முக்கிய பகுதிகளான கோரிப்பாளையம், ஜம்புரோபுரம் மார்க்கெட் மற்றும் தமுக்கம் ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்வில், லட்டு, புளியோதரை மற்றும் சுண்டல் என மொத்தம் 501 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பிரபல நடிகர் மீசை மனோகரன், வசன கர்த்தாவும் நடிகருமான அப்பா பாலாஜி, எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டும் நடிகையுமான அங்கிதா, குழந்தை நட்சத்திரம் ரிஷிதா மற்றும் லியானா குழுவைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அன்னதானத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்பட்டது. சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மற்றும் அவரது குழுவினரின் இந்த மனிதாபிமான முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தன. கள்ளழகர் திருவிழாவின் முக்கியத்துவத்தையும், அன்னதானத்தின் சிறப்பையும் இந்த நிகழ்வு எடுத்துரைத்தது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!