by Vignesh Perumal on | 2025-05-14 11:50 AM
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் மோனிகா தேவேந்திரன், இங்கிலாந்தின் ஏம்ஸ்பரி டவுனின் மேயராக மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டாவது முறையாக இந்த கவுரவ பதவியை வகிக்க உள்ளார்.
டாக்டர் மோனிகா தேவேந்திரன், இங்கிலாந்தில் பொது மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். சமூகப் பணிகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், ஏம்ஸ்பரி நகரின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். இவரது அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் சேவையைப் பாராட்டி, ஏம்ஸ்பரி டவுன் கவுன்சில் உறுப்பினர்கள் மீண்டும் அவரை மேயராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
சென்னையில் பிறந்து வளர்ந்த டாக்டர் மோனிகா, தனது அயராத உழைப்பாலும், சமூக அக்கறையாலும் இங்கிலாந்தில் ஒரு முக்கியப் பிரமுகராகவும், உள்ளூர் அரசியலில் செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்கிறார். அவரது இந்த சாதனை, உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
டாக்டர் மோனிகா தேவேந்திரனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவரது மேலான சேவை ஏம்ஸ்பரி நகருக்கு மேலும் பல நன்மைகளைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!