by admin on | 2025-02-03 02:09 PM
மதுரையில்
144 தடை உத்தரவு உள்ள நிலையில் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
படிகட்டு இல்லாமல் மலை மீது ஏறி விடக்கூடாது என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மேரி காடுகள் கொண்டு மலையை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது
நாளை இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதற்கு தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர்.
இதனால் இந்து மற்றும் இசுலாமிய அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளதால் மதுரை மாநகரில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிலையில் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி, இரண்டு படி பாதைகளிலும் மற்றும் மலை மீது 300-க்கும் மேற்பட்ட காவல்துறைய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் படிக்கட்டுகள் இல்லாமல் வேறு எந்த பாதையிலும் யாரும் ஏறாத வண்ணம் நூற்றுக்கும் மேற்பட்ட பேரி காடுகளைக் கொண்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மலைமீது சென்று வழிபாடு நடத்துவதற்கு இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு அனுமதி உள்ள நிலையில் வருபவர்களின் பெயர் விவரங்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்து அதன் பின்னர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்து அமைப்பினர் நாளை மாலை ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதால் நாளை கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
நிருபர் பாஸ்கரன் தேனி
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!