by Vignesh Perumal on | 2025-05-13 11:49 PM
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், இன்று (மே 13, 2025) ஒட்டன்சத்திரம் அருகே உள்ள லக்கையன்கோட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அந்த வேனில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சரக்கு வேனில் ரேஷன் அரிசியை கடத்தி வந்த லக்கையன்கோட்டையைச் சேர்ந்த ஆனந்த் (எ) ஆனந்தராஜ் (வயது 41) மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த பட்டையா (எ) பட்டத்தரசன் ஆகிய இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 1500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் ஆகியவற்றை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் ரேஷன் அரிசி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!