by Vignesh Perumal on | 2025-05-13 03:15 PM
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், நிலக்கோட்டை கருப்பமூப்பன்பட்டியைச் சேர்ந்த செல்வம் (வயது 40) என்பவருக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனையுடன் கூடிய 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1,11,000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோர் இந்த வழக்கை திறம்பட கையாண்டனர். அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக, இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி செல்வத்திற்கு கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
குற்றவாளி செல்வத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ஆயுள் தண்டனை, கூடுதலாக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.1,11,000 அபராதம். மேலும் இந்த தீர்ப்பு, போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற வலுவான செய்தியை தெரிவிக்கிறது. காவல்துறையினரின் துரித நடவடிக்கையும், அரசு வழக்கறிஞரின் திறமையான வாதமும் இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்ததற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த தீர்ப்பின் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!