| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

டாட்டூ கலைஞர் கைது..! 3 கிலோ கஞ்சா, மாத்திரைகள் பறிமுதல்...!

by Vignesh Perumal on | 2025-05-13 12:27 PM

Share:


டாட்டூ கலைஞர் கைது..! 3 கிலோ கஞ்சா, மாத்திரைகள் பறிமுதல்...!

சென்னை சைதாப்பேட்டை பவளவண்ணன் சுரங்கப்பாதை அருகே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட டாட்டூ கலைஞர் திவாகர் (வயது 25) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் 104 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட திவாகர், பெங்களூரு, மும்பை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு அடிக்கடி சென்று போதைப்பொருட்களை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் அவர் போதைப்பொருட்களை விற்று வந்துள்ளார்.

போதைப்பொருள் விற்பனை குறித்து காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சைதாப்பேட்டை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது பவளவண்ணன் சுரங்கப்பாதை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த திவாகரை காவல்துறையினர் சோதனையிட்டபோது, அவரிடம் கஞ்சா மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து திவாகரை கைது செய்த காவல்துறையினர், அவர் போதைப்பொருட்களை எங்கிருந்து வாங்கினார், யாருக்கெல்லாம் விற்பனை செய்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment