by Vignesh Perumal on | 2025-05-12 09:18 PM
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (மே 13) முதுமலைக்கு வருகை தரவுள்ளதால், முதுமலை யானைகள் முகாமை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு மாலை நேரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகை தருகிறார். அங்கு யானைகள் பராமரிப்பு மற்றும் முகாமின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக, நாளை மாலை யானைகள் முகாமை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மதிய நேரங்களில் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் யானைகள் முகாமுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, முதுமலை புலிகள் காப்பகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!