இந்திய கிரிக்கெட் அணியின் கோட் என்று அழைக்கப்படும் விராட் கோலி இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் இவர் இப்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் இருந்து ஓய்வே அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
14 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. இந்த டெஸ்ட் கிரிக்கெட்டானது, பல சோதனைகளையும், பாடங்களையும் சொல்லிக் கொடுத்துள்ளது. அது என்னுடைய வாழ்க்கைக்கும் உதவியது.
வெள்ளை நிற ஆடையில் விளையாடுவது எப்போதும், ஆழமான உணர்வை தரும். இந்தக் கடினமான முடிவை, சரியான நேரத்தில் எடுத்துள்ளேன். என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை எப்போதும் புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன், எனக் கூறினார்.