| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

தியாகராய நகரில் பயங்கர தீ விபத்து..! திடீர் பரபரப்பு..!

by Vignesh Perumal on | 2025-05-12 11:58 AM

Share:


தியாகராய நகரில் பயங்கர தீ விபத்து..! திடீர் பரபரப்பு..!

சென்னை தியாகராய நகரின் பரபரப்பான வணிகப் பகுதியான ரங்கநாதன் தெருவில் அமைந்துள்ள சோபா ஆடையகத்தில் இன்று (மே 12) பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

திடீரென கடையின் ஒரு பகுதியில் தீப்பற்றியதை அடுத்து, தீ மளமளவென பரவத் தொடங்கியது. தீ விபத்து ஏற்பட்டவுடன் கடையிலிருந்த பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தற்போது தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீயின் தீவிரம் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மின் கசிவு அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்டமாக கருதப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாக அணைத்த பின்னரே விபத்துக்கான சரியான காரணம் குறித்து தெரியவரும்.


தீ விபத்தின் காரணமாக ரங்கநாதன் தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 


செய்தி-ஜெயவேல் சென்னை.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment