by Vignesh Perumal on | 2025-05-12 09:43 AM
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று (மே 11, 2025) தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் இடும்பன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுவன், பழனிக்கு தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தான். நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், அருகில் இருந்த இடும்பன் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் குதித்தபோது பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயத்தின் காரணமாக அவனால் வெளியே வர முடியவில்லை.
சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவனைத் தேடியுள்ளனர். அப்போது குளம் அருகே சிறுவனின் ஆடைகள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் தீயணைப்புத் துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சுமார் நான்கு மணி நேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டனர். சிறுவனின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர், பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர் வீட்டிற்கு வந்த சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!