by Vignesh Perumal on | 2025-05-11 10:59 AM
உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அன்னையர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்னையரின் அன்பையும், தியாகத்தையும் போற்றும் வகையில் அவர் இந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார். அன்னையர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.