by Vignesh Perumal on | 2025-05-10 11:12 AM
இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் எல்லையைத் தாண்டி பாகிஸ்தானின் பல இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த பதற்றமான சூழ்நிலையில், ஜம்முவில் பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில், பாகிஸ்தானில் இன்று அதிகாலை 01.44 மணிக்கு இந்திய நேரப்படி ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் நிலப்பகுதியில் பதிவாகியுள்ளது.
இருப்பினும், ஜம்முவில் நிகழ்ந்ததாக கூறப்படும் குண்டுவெடிப்புக்கும், பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
எல்லை தாண்டிய இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதல்கள் மற்றும் பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல்களால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஜம்முவில் நிகழ்ந்ததாக கூறப்படும் குண்டுவெடிப்பு சம்பவம் அப்பகுதியில் மேலும் பீதியை கிளப்பியுள்ளது. இது குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய நில அதிர்வு மையம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.