by admin on | 2025-02-02 07:16 PM
திண்டுக்கல், பழனி அருகே அமரபூண்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் அந்த வழியாக சென்ற பேருந்தில் சென்ற மாணவிகள் முன்பாக கத்தியை காட்டி ரகளையில் ஈடுபட்டும், பொதுமக்களை அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசியதாக வந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆயக்குடி போலீசார் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மேலகோட்டையை சேர்ந்த நவீன்குமார்(23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
போட்டோ செய்தி நன்றி
மோகன் கணேஷ் திண்டுக்கல்