by Muthukamatchi on | 2025-05-10 09:19 AM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே
பாப்பம்மாள்புரம் பகவதியம்மன் கோவிலில் மழை வேண்டி சுமங்கலி மற்றும் க
ன்னிப்பெண்கள் குத்துவிளக்கு பூஜை 25 வது ஆண்டாக குத்துவிளக்கு பூஜை நடத்தும் இளைஞர் குழுவிற்கு பாரட்டு. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் பகவதியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறதுமூன்றாம் நாளான இன்று கோவில் வளாகத்தில் 208 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது .இளம்தென்றல் நண்பர்கள் என்ற அமைப்பினர் தொடர்ந்து 25 ஆவது ஆண்டாக குத்துவிளக்கு பூஜையை சிறப்பாக நடத்தியது பொதுமக்கள் அனைவரது பாராட்டுகளையும் பெற்றதுகைகளில் காப்பு கட்டி ஒரு வார காலம் விரதம் இருந்த சுமங்கலி மற்றும் கன்னிப் பெண்கள்மழை வேண்டியும் குடும்பத்தில் அமைதி வேண்டியும் குழந்தை பாக்கியம் வேண்டியும் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும் சமூக நல்லிணக்கம் வேண்டியும்பிரார்த்தனை செய்து கொண்டு குத்துவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர்இதையடுத்து பகவதியம்மனுக்கு பால் பன்னீர் புஷ்பம் சந்தனம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் மஞ்சள் குங்குமம் மாங்கல்யம் பூ பழம் உள்ளிட்ட பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டனமழை வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பொது நல கோரிக்கைகளை வேண்டி நடைபெற்ற இந்த 208 குத்துவிளக்கு பூஜையில் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் இளம்தென்றல் நண்பர்கள் என்ற அமைப்பினர் தொடர்ந்து 25 ஆவது ஆண்டாக குத்துவிளக்கு பூஜையை சிறப்பாக நடத்தியது பொதுமக்கள் அனைவரது பாராட்டுகளையும் பெற்றது