by Vignesh Perumal on | 2025-05-09 07:57 PM
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவகாசி, ஆனை கூட்டம் பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் ஸ்ரீநிதிஸ்குமார் (வயது 21) என்பவரை வத்தலகுண்டு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு புகார் வந்ததை அடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஸ்ரீநிதிஸ்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் ஸ்ரீநிதிஸ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்த வழக்கு குறித்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!