by Vignesh Perumal on | 2025-05-09 07:57 PM
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவகாசி, ஆனை கூட்டம் பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் ஸ்ரீநிதிஸ்குமார் (வயது 21) என்பவரை வத்தலகுண்டு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு புகார் வந்ததை அடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஸ்ரீநிதிஸ்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் ஸ்ரீநிதிஸ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்த வழக்கு குறித்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!