by admin on | 2025-02-02 02:06 PM
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்*
பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தைப்பூச பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.பிப். 10ம் தேதி தெப்பத் திருவிழாவும், விழாவின் முக்கிய நிகழ்வாக பிப். 11ம் தேதி திருக்கோயிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி வழி நடை உபயங்களை கண்டருளியபின் வடதிருக்காவேரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.