by Vignesh Perumal on | 2025-05-06 07:45 PM
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே சாலைப்புதூர் பகுதியில் இன்று (06.05.2025) நிகழ்ந்த சாலை விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கட்டாம்பட்டியைச் சேர்ந்த கமல்ராஜ் (27) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இந்த விபத்தில் கமல்ராஜ் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கமல்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த துயர சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்தும், பேருந்து ஓட்டுநர் கவனக்குறைவாக ஓட்டியது காரணமா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!