by Vignesh Perumal on | 2025-05-06 07:41 AM
திண்டுக்கல் நகரில் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 22 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலன் என்பவர் நேற்று (05.05.2025) ஸ்பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மேற்கு ஆரோக்கிய மாதா தெருவைச் சேர்ந்த பிரான்சிஸ் மகன் ஆரோன் ஆனந்த் (22) என்பவர் திடீரென பாலனை வழிமறித்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் பாலனிடம் பணம் பறிக்க முயன்றதாகவும் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாலன் உடனடியாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பணம் பறிக்க முயன்றது ஆரோன் ஆனந்த் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆரோன் ஆனந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தி முனையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட ஆரோன் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!