| | | | | | | | | | | | | | | | | | |
விளையாட்டு Cricket

முகமது ஷமிக்கு கொலை மிரட்டல்...! போலீசார் விசாரணை..!

by Vignesh Perumal on | 2025-05-06 06:55 AM

Share:


முகமது ஷமிக்கு கொலை மிரட்டல்...! போலீசார் விசாரணை..!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் மின்னஞ்சல் மூலம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். பணத்தை கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முகமது ஷமி உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்னஞ்சலில் இருந்து அனுப்பப்பட்ட மிரட்டல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மின்னஞ்சல் முகவரி மற்றும் அது அனுப்பப்பட்ட ஐபி முகவரி ஆகியவற்றை வைத்து மிரட்டல் விடுத்த நபர்களை கண்டறியும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

முகமது ஷமிக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. போலீசார் விரைவில் மிரட்டல் விடுத்த நபர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment